சனி, 16 பிப்ரவரி, 2013

சாமுத்ரிகா லட்சணம் - பெண்கள்


சாமுத்ரிகா லட்சணம் - பெண்கள்

ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர்எல்லாபெண்களுக்கும் சாமுத்திரிகா லட்சணப்படி எல்லா அவயங்களும் அமைவதில்லைஅமைந்தால்கொள்ளையோ... கொள்ளைதான்ஒரு இளம் பெண்ணுக்கு உச்சி முதல் பாதம் வரை உள்ள பகுதிகள் எப்படிஇருக்க வேண்டும் என்று முன்னோர்கள் வகுத்து கூறியுள்ளார்கள்அதுதான் சாமுத்திரிகா லட்சணம்.
சாமுத்திரிகா லட்சணப்படி ஒரு பெண்ணுக்கு அழகு பாகங்கள் எப்படி இருக்க வேண்டும்?

1. கால்பாதம்ஒரு பெண்ணின் பாதம் செந்தாமரைப் பூப்போன்று சிவப்பாக இருக்க வேண்டும்கால்களின்விரல்களும் பூமியில் பதிய வேண்டும். 5 விரல்களும் ஒன்றோடொன்று பொருந்திய நிலையில் இருத்தல்வேண்டும்குதிகால் கொஞ்சம் அகலமாக மயிலிறகுபோல் அமைந்திருக்க வேண்டும்.

பாதங்களின் பெருவிரல் நீண்டிருந்தால் நல்லதுகாலிலுள்ள நடுவிரலுக்கு அடுத்த விரல் ஒண்டிருந்தால்செல்வச் செழிப்புடன் வாழ்வாள்குதிகாலின் மேல் வெள்ளை மச்சம் இருந்தால் மகிழ்ச்சியாக வாழ்வாள்.

மேலும் பிரதானமாக கெண்டைக்கால் பருத்து இல்லாமல் இருப்பது நலம் ஆணாக இருந்தாலும் பெண்ணாகஇருந்தாலும் இடை குறுகி இருப்பது நலம் அதுபோல் இருப்பவர்கள் ஆரோக்கியமாகவும்அதிர்ஷ்டசாலியாகவும் இருப்பார்கள்.

சில பெண்களுடைய கால் விரலில் சுண்டு விரல் மட்டும் தரையில் படாமல் மேலே தூக்கியவாறு இருக்கும்.அவ்வாறு இருந்தால் அந்த பெண் குடும்ப வாழ்க்கைக்கே ஒத்து வராது எவ்வளவு இருந்தாலும் கணவரைஒன்றுமில்லாமல் செய்துவிடும் என்று சொல்லப்படுகிறது.

காலின் கட்டை விரல் வளைந்தும் மற்றொன்று வளையாமலும் இருக்கும்அப்படி இருந்தால் அந்தபெண்ணுக்கு இரண்டு கணவர் என்று அர்த்தம்அது அங்கீகாரத்துடனும் இருக்கலாம் இல்லாமலும்இருக்கலாம்.

2. தொடைபெண்களின் தொடை வாழைத்தண்டுபோல் பளபள என்று இருக்க வேண்டும்முழங்கால்சிறிதாக இருக்க வேண்டும்பெண்களின் தொடை உரோமம் இல்லாமல் பளிச்சென்று காட்சி தர வேண்டும்.

3. இடைஇளம் பெண்ணின் இடை நடுவில் சிறுத்தும் மேலும் கீழும் விரிந்திருக்க வேண்டும்.ஆலிலைப்போல் வயிறு அமைந்திருந்தால் அழகுவயிறு நல்ல வெள்ளித் தட்டுப்போல் இருந்து தொப்புள்வலது பக்கமாக சுழித்திருந்தாலும் செல்வம் பெருகும்.

4. மார்பகங்கள்பெண்ணின் மார்பகங்கள் ஒன்றோடொன்று நெருக்கமாக தோன்ற வேண்டும்அத்துடன்மார்பகங்கள் நிமிர்ந்தும் நீண்டும் காட்சி தர வேண்டும்.

5. கைவிரல்பெண்ணின் கைகள் கொளுத்த மீன் போல் சிவப்பாக இருத்தல் வேண்டும்கைவிரல்கள்பயித்தங்காய்போல் அழகாக காட்சி தர வேண்டும்.

6. கழுத்துபெண்ணின் முகம் முழு நிலவுபோல ஒளிமிக்கதாக விளங்க வேண்டும்பெண்ணின் தடுகள்உருண்டு திரண்டு பவளம் போலிருந்தால் அழகுபெண்ணின் பல் வரிசை முத்துக்களைக் கோர்த்தது போலவரிசையாக இருக்க வேண்டும்.

7. கண்கள்பெண்களின் கண்கள் சிவந்து நீண்டு அடிக்கண் அகன்றுமாவடு போல இருக்க வேண்டும்..பாலில் விழுந்த வண்டுபோல கண்கள் துள்ள வேண்டும்கரிய விழிகளில் செவ்வரி ஓடியிருக்க வேண்டும்.பெண்களுக்கு புருவம் வில்லைப்போல் வளைந்திருக்க வேண்டும்.

உருண்டு திரண்ட கண்கள் அதிர்ஷ்டத்தின் அடையாளம் என்று சொல்வார்கள்சற்றே உருண்டு திரண்டவிழிகள்தான் அதற்காக ரொம்பவும் பெரிய விழிகள் அல்ல.
மான் விழி என்று சொல்வார்கள் மருளக் கூடிய பார்வை கொண்டவர்கள் கணவருக்கு ஏற்றவராகவும்எல்லா இடத்திலும் நேர்மறை சிந்தனை கொண்டவராகவும் இருப்பார்கள்மருண்ட விழிகளில் சிலஅமைப்புகள் உண்டு.

உருண்ட விழி அதிர்ஷ்டம் மருண்ட விழி கணவருக்கு நல்லதாக இருக்கும் பரந்த விழிகள் பிறரை எளிதில்கவரக்கூடியதாகவும் பெரிய துறையில் பெரிய பதவியில் அமரக்கூடியவராகவும் இருப்பார்கள்.

விழிகளை விட விழித்திரை ரொம்ப முக்கியம்விழித்திரை வெள்ளையாக இருக்கிறதா அல்லது மஞ்சளாகஇருக்கிறதா என்று பார்க்க வேண்டும்உருண்ட விழியின் பின்னணி வெள்ளையாக இருந்தால் அவர்கள்திருட்டுத் தனம் செய்பவர்களாக இருப்பார்கள்.
சிவந்த விழித்திரையைக் கொண்ட பெண்கள் பிழைக்கத் தெரியாதவர்கள் என்று சொல்வார்களேஅதுபோல இருப்பார்கள்.

மஞ்சள் பின்னணியில் பரந்த விழியைக் கொண்டிருப்பது கொஞ்சம் பயங்கரமானதுவாழ்க்கையில் பெரியஏற்ற இறக்கங்களை சந்திப்பார்கள்.

விழி மற்றும் விழிப்பின்னணி இமைகள் போன்றவை பற்றி சொல்லப்படுகிறதுஇமையில் இருக்கும்முடிகள் அடர்த்தியாக இருக்கக் கூடாதுஅவ்வாறு இருந்தால் ஆயுள் குறைவு ஏற்படும்அடர்த்திஇல்லாமல் பரவலாக இருந்தால் ஆயுள் நிறைந்து இருக்கும்.
வளையக்கூடிய புருவங்கள் மிகப்பெரிய பதவியில் உட்காருவார்கள்இசையில் ஆர்வம் இருக்கும்.

முண்டக் கண்ணி என்று சொல்லப்படும் கண்கள் உள்ளவர்களுக்கு தாய் தந்தையில் யாராவது ஒருவர்இருக்க மாட்டார்கள்சிறிய வயதிலேயே பெற்றோரில் ஒருவரை இழந்துவிடுவார்கள்.
உள்ளுக்குள் இருக்கும் கண்கள் கொண்டவர்கள் ரொம்ப அப்பாவியாக இருப்பார்கள்பின்னர் செழிப்பாகஇருப்பார்கள் 30 வயது வரை காசை செலவு செய்துவிட்டு பின்னர் பணத்தை சரியாக கையாள்வார்கள்.

8. கூந்தல்பெண்களின் கூந்தல் நீண்ட கருங்கூந்தலாக இருக்க வேண்டும்பெண்களின் கூந்தலில் மலர்மணம் வீச வேண்டும்.

கோர முடி குடியைக் கெடுக்கும் சுருட்டை சோறு போடும்” என்று சொல்வார்கள்.
அதாவது சுருட்டை முடி கொண்டவர்கள் எல்லோரையும் வைத்து சோறு போடுபவர்களாகவும் சுற்றுத்தார்நண்பர்களை மிகவும் நேசிப்பவர்களாகவும் இருப்பார்கள்அரவணைக்கும் தன்மை கொண்டவர்களாகஇருப்பார்கள்.

கோரை முடி கொண்டவர்கள் தாய் தந்தையை கஷ்டப்படுத்துபவர்களாகவும் குடும்பத்திற்கு கெட்ட பெயரைகொடுப்பவர்களாகவும் இருப்பார்கள்கலப்பினத்தில் திருமணம் முடிப்பார்கள்.
ரோமக் கால்கள் எந்த அளவிற்கு மென்மையாக இருக்கிறதோ அந்த அளவிற்கு வாழ்க்கை மென்மையாகஇருக்கும்ரொம்ப கஷ்டப்படாமல் அமைதியாக வீட்டிலேயே இருந்தபடி வாழ்க்கை நடத்தும் யோகம்கிட்டும்.

கடினமான மொரமொரவென்று இருக்கும் தலை முடி உள்ளவர்களுக்கு கஷ்ட ஜீவனம் இருக்கும்உழைத்துசாப்பிட வேண்டிய நிலை ஏற்படும்அவர்களது முடி போன்றுதான் வாழ்க்கையும் அமையும்.

9. வாசம்பெண்களின் உடம்பில் கற்பூர வாசனைசந்தன வாசனைதென்னம்பாளை வாசனை,இலுப்பைப்பூ வாசனைஎலுமிச்சை வாசனைதாழம்பூ வாசனைதாமரைப்பூ வாசனை ஆகியவை முன்பக்கமும்பின் பக்கமும் வருமானால் செல்வச் செழிப்புடன் வாழ்வாள்.

10. மூக்கு: மூக்கு உயர்ந்து காணப்படுவது நலம்மூக்கின் நுனி அமைப்புதான் முக்கியமாகசொல்லப்படுகிறதுமூக்கின் நுனி கூராக இருந்தால் அதி புத்திசாலி அரசாளும் யோகம் அமைச்சராதல்போன்ற யோகம் உண்டுஎலியைப் போன்ற மூக்கு அதாவது லேசாக தூக்கிய படி இருந்தால் காம உணர்வுஅதிகமாக இருக்கும் என்பார்கள்ஒரு சிலருக்கு மூக்கின் நுனிப் பகுதி உருண்டு காணப்படும்அவர்கள்புத்திசாலியாக இருப்பார்கள்பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் குணம் இருக்கும சந்தைப்படுத்துதல்துறையில் சிறந்து விளங்குவார்கள்.

சிலர் மூக்கு மண்ட மூக்கு என்று சொல்வது போல் இருக்கும்அவர்கள் மற்றவர்களைஇம்சைப்படுத்துவார்கள்சிலருக்கு மூக்கு கொடை மிளகாய் போல் இருக்கும்அவர்களும் மற்றவர்களதுஉணர்வுகளை புரிந்து கொள்ளாமல் அடக்கி ஆள முயற்சிப்பார்கள்.

மூக்கின் அடிப்பகுதி நடுப்பகுதி நுனிப் பகுதி என மூன்று அமைப்பையும் வைத்து சொல்லப்படுகிறதுஒரேசீரான மூக்கைக் கொண்டவர்களுக்கு சீரான வாழ்க்கை இருக்கும்.கொடை மிளகாய் மூக்குக் கொண்டவர்கள்தான் கொஞ்சம் பயங்கரமானவர்கள்.
ஒரு சிலருக்கு அடிப்பகுதி ஒரு மாதிரி இருக்கும் நடுப்பகுதி வேறு மாதிரி இருக்கும் நுனிப்பகுதி வேறு ஒருமாதிரி இருக்கும்இவர்களுக்கு மாறுபட்ட சிந்தனை இருக்கும்மூக்கு பார்க்கும்போதே வளைந்து நெளிந்துஇருக்கும்.

வாசிம் யோகம்… வாசிம் என்றால் மூக்கு பயிற்சி செய்வதை குறிக்கும்அதாவது சித்தர்கள் மூக்கு பயிற்சிசெய்வார்கள்அவர்களுக்கு கிட்டத்தட்ட பென்சில் போல் இருக்கும் மூக்குஅதுபோன்ற மூக்கு இருந்தால்பிரணயாமம் வாசியாம் செய்பவர்கள் என்பதை அறிந்துக் கொள்ளலாம்.

அந்த மாதிரி மூக்கு அமைப்பு இருந்தால் எதிர்காலத்தைப் பற்றி அறிவும் திறன் கொண்டவர்களாகஇருப்பார்கள் என்று சொல்வார்கள்.

10. நெற்றிசாமுத்ரிகா லட்சணத்தில் நெற்றி மிக முக்கியமான இடத்தில் உள்ளது.
உயர்ந்த நெற்றி அறிவின் அடையாளம்கொஞ்சம் மேடாக பரந்து இருந்தால் சிறப்பாக இருக்கும்.

நெற்றியின் பரந்து விரிந்த அமைப்பைவிட அதில் உள்ள கோடுகளுக்குத்தான் மிக முக்கியம்.
அல்லது 3 கோடுகள் இருப்பது நலம்பலதரப்பட்ட சிந்தனை அறிவு கொண்டவர்களாக இருப்பார்கள்.அதற்குமேல் இருப்பது நல்லதற்கல்ல.

செவியின் அதாவது காதின் அமைப்பு பரந்து விரிந்து இருக்க வேண்டும்செவி குறுக குறுக மனநிலையும்குறுகி இருக்கும்சிந்தனையும் குறுகலாக இருக்கும்.

எல்லாம் இருந்தாலும் கண்களுக்கும் மனதுக்கும் பிடித்து இருந்தால் மாட்டுமே ஆணுக்கு  புடிக்கும் 
இது தான் ஆணின் மனதின் வெளிச்சம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...